டெங்கு காய்ச்சல் - தற்காப்பும் மருத்துவமும்


டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?

  டெங்கு காய்ச்சல் என்பது திடீரென தோன்றும் ஒரு வைரஸ் நோயாகும். இது டெங்கு வைரஸின் டைப் - 1 டைப் - 2 டைப் - 3 மற்றும் டைப் - 4 ஆகிய 4 வகை வைரஸ்களாலும் ஏற்படுவது.

  வெப்ப மண்டலம் சார்ந்த நாடுகளில் காணப்படும் ஏடிஸ் ஏஜிப்டி  என்ற ஒரு வகை கொசுவால் இது பரவுகிறது. இந்த கொசு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை கடித்து வைரஸை தன்னுள் எடுத்து மற்றவர்களுக்கு பரப்புகிறது.

பரிசோதனைகள் :

♡ வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல் அதாவது இரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோசைட்ஸ் என்ற வௌளை இரத்த அணுக்களின் அளவு (4000 - 10000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பரிசோதனை செய்தல்.

♡ டெங்கு காய்ச்சலின் போது இரத்தத்தில் உள்ள இரத்த வட்டுக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படும்.

சிகிச்சை முறைகள் :

♡ டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி இலை சாறு குடித்தால் இரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கும்.

♡ நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்து காய்ச்சலை குணப்படுத்தும். மலைவேம்பு இலை சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது.

♡ இரத்த வட்டுக்கள் அளவு 4000 - த்திற்கும் குறைவாக இருக்கும்போது புதிய இரத்தமோ அல்லது இரத்தவட்டுக்கள் நிறைந்த ஊனீர் (பிளாஸ்மா) அதாவது பி ஆர் பி ஏற்றப்படும்.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகள் :

♡ கொசுக்கடிகளிலிருந்து நம்மை பாதுகாப்பதன் மூலம் இதனை தடுக்கலாம். பாதுகாப்பான உடைகள் அணிய வேண்டும்.

♡ வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். மேலும் தண்ணீரை காய்ச்சி குடித்தல் வேண்டும்.

டெங்கு காய்ச்சலின் மூன்று கட்டங்கள் :

காய்ச்சல் கட்டம் :

♡ கடுமையான காய்ச்சல் வரக்கூடிய முதல் கட்டம் 104 105 106 என்று அதிக அளவில் உள்ள காய்ச்சல் ஆகும். உடம்பு வலியும் தலை வலியும் வரும். சிலருக்கு வாந்தியும் இருக்கும். இந்த சிரமங்கள் இரண்டிலிருந்து ஏழு நாட்கள் வரை இருக்கும். வெகு சிலருக்கு சரும தடிப்புகள் உண்டாகும். அவை ஒரு ஏழு நாட்கள் வரை இருந்து விட்டு பின்பு மறையும். சிலருக்கு வாய் மற்றும் மூக்கின் உள்ளே அமைந்திருக்கும் சளிச்சவ்வுகளில் இரத்த பெருக்கு உண்டாகும். இந்த காய்ச்சல் சற்று வித்தியாசமானது. ஒரு நாள் காய்ச்சலே இல்லாதது போல் தோன்றும். மறுநாள் வந்துவிடும்.

நெருக்கடியான கட்டம் :

 இந்த கால கட்டத்தில் இரத்த அணுக்களை ஏந்திச் செல்லும் Pடயளஅய என்ற நிறமற்ற திரவம் இரத்த நாளத்தை விட்டு வெளியேறி செல்கிறது. இந்த நிலை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரை நீடிக்கும். மார்பகம் அடி வயிற்று பகுதிகளில் இந்த நிறமற்ற திரவம் குவிந்து கொள்கிறது. இவ்வாறு இந்த நிறமற்ற திரவம் இரத்த அணுக்களை ஏந்தி செல்லும் வேலையை செய்யாமல் பந்த் செய்வதால் முக்கியமான உடல் உறுப்புகளுக்கு இரத்தம் முழுமையாக விநியோகம் செய்யப்படாமல் உடம்பு திணறி போகும். இதனால் பல உறுப்புகள் செயல்படாமல் போகக்கூடும். மேலும் இரைப்பை குடலில் அதிகமான இரத்த பெருக்கு உண்டாகக்கூடும்.

மீட்புக் கட்டம் :

 இந்த மீட்பு கட்டத்தில் இரத்த நாளத்தை விட்டு நீங்கி சென்ற அந்த நிறமற்ற திரவம் திரும்பவும் தன் இருப்பிடம் வந்து சேரும். இது ஒரு இரண்டு நாட்களுக்கு நீடிக்கும். உடல் நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படும். அத்தகைய தருணத்தில் ஒரு சிலருக்கு உடம்பு முழுவதும் ஒரு அரிப்பு தோன்றும்.

- இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.


உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு கீழே உள்ள சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
--------------------------------------------