வலிப்பு நோயின் காரணங்களும் முதலுதவியும்


வலிப்பு நோய் ஏற்படக் காரணங்கள் :

♡ மூளையைத் தாக்கும் ஒரு நோய்தான் வலிப்பு நோய். அதாவது மூளையில் ஏதாவது ஒரு காரணத்தினால் உண்டாகிற அதீத அழுத்தத்தால் வேகமாக மின்சாரம் போல் உற்பத்தியாகி நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டுஇ கைஇ கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதுதான் வலிப்பு ஆகும்.

♡ பரம்பரைஇ தலையில் அடிபடுதல்இ பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடுஇ மூளையில் கட்டிஇ ரத்தக்கசிவுஇ ரத்தம் உறைதல்இ கிருமித் தொற்றுஇ மூளைக் காய்ச்சல்இ மூளை உறை அழற்சி காய்ச்சல்இ டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள்.

♡ சர்க்கரை நோய்இ விபத்து போன்ற காரணங்களால் வலிப்பு நோய் உண்டாகும்.

♡ மைய நரம்பு மண்டலத்திற்கு இழைக்கப்படும் சேதங்களால் ஏற்படும்.

♡ பிறப்பின்போது தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள் அல்லது சிராய்ப்புகளால் ஏற்படுகிறது.

♡ சிலருக்குப் பிறப்பின்போதே இருக்கும் நரம்புமண்டலக் குறைப்பாடு.
விபத்தினால் தலையில் ஏற்படும் காயங்கள்.

♡ மூளையில் ஏற்படும் கட்டிகள்.

♡ ஆல்கஹால்இ போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் நரம்பு மண்டலம் பாதித்தல் மூளைக் காய்ச்சலால் வலிப்பு வர வாய்ப்புள்ளது.

வலிப்பு நோய் வராமல் தடுக்கும் முறைகள்

♡ தினமும்இ ஏழு மணிநேரம் முதல் எட்டு மணி நேரம்இ நன்றாக தூங்க வேண்டும்.

♡ அதிக உணர்ச்சி வசப்படக் கூடாது.

♡ தொடர்ச்சியாகஇ அருகில் அமர்ந்துஇ டிவி பார்க்கக் கூடாது.

♡ வேளை தவறாமல் உணவு சாப்பிட வேண்டும். பசியோடு இருப்பது கூடாது. புகைத்தல்இ மது அருந்தக் கூடாது.

♡ அதிக நேரம் போன் பேச கூடாது.

வலிப்பு நோய் வந்தபின் காக்கும் முறைகள் :

♡ இந்த நோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு முன் மருத்துவர் ஆலோசனைப்படி மருத்தினை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். வலிப்பு நோய் தாய் மற்றும் சேய் இருவரையும் பாதிக்கும்.

♡ ஆனால் முறையான வலிப்பு நோய் மாத்திரையும் சத்து மாத்திரையும் சாப்பிடும் போது சுகப்பிரசவம் காணலாம். வலிப்பு இல்லாமல் குறைந்தது 6 மாதங்கள் ஆன பிறகு வாகனங்கள் ஓட்டலாம்.

♡ வலிப்பு நோய் உள்ளவர்கள் தவறாமல் மருந்து சாப்பிட்டால் வலிப்பு இல்லாமல் இருக்கலாம்.

♡ பள்ளிஇ கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லலாம். விளையாடலாம் உடற்பயிற்சி தியானம் மற்றும் பயணம் செய்யலாம்.

♡ திருமணம் செய்து கொள்ளலாம்இ சாதாரணமாக குழந்தைகளைப் பெறலாம். குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாம்.

♡ நல்ல உணவுஇ உடற்பயிற்சிஇ தியானம் மற்றும் சிந்தனை நல்வழிப்படுத்தும்.

♡ மற்றவர்களைப் போல் நன்கு வாழலாம். ஒவ்வொரு முறை வலிப்பு வரும் போதும் மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிப்பு அடைகின்றன. இது நாளடைவில் மூளை வளர்ச்சியை பாதிக்கும்இ எனவே முறையான மருந்துகள் சாப்பிட்டு வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

♡ சர்க்கரை நோய்இ ரத்த அழுத்தம் போன்ற நோய்களைப் போலஇ வலிப்பும் ஒரு நோய் தான். மூளை நரம்புகளின் மாறுபட்ட இயக்கத்தால் வருவது. இதற்கு மருத்துவ சிகிச்சை உண்டு. நோயாளிகள் சீராக மருந்து சாப்பிட்டுஇ தக்க வாழ்க்கை முறையைக் கடைபிடித்து வலிப்பு வராமல் தடுத்து அச்சமின்றி வாழலாம்.

- இருப்பினும்இ மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.

வலிப்பு வரும்போது செய்வதும் செய்யக்கூடாததும்

வலிப்பு வரும்போது செய்யவேண்டியது :

♡ பதட்டப்படாமல் நோயாளியை அமைதியாக கையாள வேண்டும்.

♡ நோயாளியை ஒரு பக்கமாகஇ படுக்க வையுங்கள். இதனால் வாயில் அதிகமாக தோன்றும் உமிழ்நீர்இ நுரை போன்றவை வெளியேறுவதுஇ சுலபமாகும். இதனால்இ சுவாசத்திற்கு எந்த பாதிப்பும் வராது.

♡ நோயாளியின் அருகில் உள்ள பொருட்களைஇ அகற்ற வேண்டும். இதுஇ நோயாளி அப்பொருட்களின் மேல் முட்டி அடிபடுவதைத் தவிர்க்கும்.

♡ சிறு தலையணைஇ துணி மடிப்புகளைஇ தலைக்கடியில் வைக்கவும்.

♡ அடிபட்டிருந்தாலோஇ வலிப்பு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீட்டித்தாலோஇ நிற்காமல் திரும்பத் திரும்ப வந்தாலோஇ ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.

வலிப்பு வரும்போது செய்யக்கூடாதது :

♡ நோயாளியைச் சுற்றி கூட்டமாக நிற்கக் கூடாது.

♡ காற்றோட்டமான சூழல் மிக அவசியம்.

♡ வாயில்இ பற்களுக்கிடையில் எப்பொருளையும் வைக்கக்கூடாது.

♡ கையில் சாவி கூரான பொருட்கள் தருவதைத் தவிர்க்க வேண்டும்.

♡ முழு சுய நினைவு வரும் வரைஇ குடிக்கவோஇ சாப்பிடவோ எதுவும் தரக்கூடாது.

வலிப்பு நோயின் வகைகள்

 மேலோட்டமாக இவற்றை இருவகைப் படுத்தலாம். முதலாவது பகுதி (Pயசவயைட) வலிப்புஇ இரண்டாவது பொது(புநநெசயட) வலிப்பு.

பொதுவலிப்பு :

பகுதி வலிப்பில் மூளையின் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்படும். அப்பகுதியினால் இயக்கப்படும் உறுப்புகள் வலிப்புக்கு உள்ளாகும். கைஇ கால்இ வாய் இவற்றைக் கட்டுப் படுத்தும் மூளையின் பகுதியில் வலிப்பு ஏற்பட்டால் அந்த உறுப்புகள் மட்டும் பாதிக்கப்படும்.

பகுதி வலிப்பு:

♡ பொதுவலிப்பு மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் பாதிக்கப்படுவதால் உண்டாவதாகும். இதிலும் இருவகைகள் உள்ளன. பெடிட்மால்இ கிராண்ட்மால் என இவ்விரு வகைகளும் அழைக்கப்படுகின்றன.

♡ பெடிட்மால் மிகச் சிறிய அளவில் தோன்றி மறையும் ஒரு வலிப்பாகும். சில சமயம் இது கண்டுகொள்ளப்படாமலேயே வந்து போகலாம். இது ஒரு நொடியிலிருந்து பத்து முதல் இருபது நொடிகள் வரை நீடிக்கலாம்.

♡ கிராண்ட்மால் தாக்கியவர் முதலில் கண் முன் ஒரு பிரகாசமான காட்சி தோன்றுவது போல உணர்வார். கை கால்கள் உதறிக் கொள்ளும். பின்இ சுய நினைவின்றி மயங்கி விழுவார். மலம்இ சிறுநீர் போன்றவை அவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் பிரிய நேரலாம்.
உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு இந்த சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
----------------------------------------------------------------------------------------------------------------------