This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

அக்குபஞ்சர் அதிசயம்


மனித உயிருக்குச் சிகிச்சை தருவதற்கு, அந்த உயிரின் உயிர் ஆற்றலைப் படிக்கத் தெரிந்தவரே மருத்துவம் செய்பவராக இருக்கமுடியும். உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் நேர்நிலைக்குக் கொண்டுவந்து ஆரோக்கியத்தைத் தரக்கூடிய மருத்துவ முறையாக அக்குபஞ்சர் கருதப்படுகிறது.

அக்குபஞ்சர் பரவல்

நவீன அக்குபஞ்சர் மருத்துவம் உலகம் முழுக்கத் தற்போது பிரபலமாக இருப்பதற்குச் சீனாவின் முன்னாள் ஜனாதிபதி மாவோதான் காரணம். 1949-ல் கம்யூனிசப் புரட்சி ஏற்படுவதற்கு முன்பே சீனா போன்ற பரந்த, மக்கள்தொகை மிகுந்த ஒரு நாட்டின் ஆரோக்கியப் பிரச்சினைகளை மேற்கத்திய மருத்துவர்களால் மட்டும் தீர்க்கமுடியாது என்பதை அவர் புரிந்துகொண்டிருந்தார். அக்காலத்தில் சீனாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 5-ல் 1 ஆக இருந்தது. ஆயிரம் பேருக்கு 30 பேர் வீதம் ஆண்டுதோறும் இறந்துகொண்டிருந்தனர்.

ஊட்டச்சத்தின்மை, தொற்றுநோய்கள், நவீன மருத்துவர்கள் கேள்விப்பட்டிராத மர்ம நோய்கள், மலேரியா, பிளேக், அம்மை நோய்கள், காசநோய் எனப் பலவிதமான நோய்கள் சீனாவை உலுக்கிவந்த வேளை அது. 50 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவை வெறுமனே 20 ஆயிரம் அலோபதி மருத்துவர்களால் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்திருந்தார் மாவோ.

சீனாவில் சிதறிக்கிடந்த பாரம்பரிய மருத்துவ முறைகளையும் பாரம்பரிய மருத்துவர்களையும் ஒருங்கிணைக்க அவர் கொண்டு வந்த திட்டம்தான் ‘பேர்ஃபுட் டாக்டர்ஸ்’. இதன் மூலம் ஐந்து லட்சம் பாரம்பரிய மருத்துவர்களை அவர் ஒருங்கிணைத்தார்.

மேற்கத்திய மருத்துவத்தையும் புறக்கணிக்காமல் சீன மருத்துவத்தை இணைத்தார். அத்துடன், அக்குபஞ்சர் மற்றும் மூலிகை மருத்துவக் குறிப்புகளைப் பாரம்பரிய மருத்துவர்களை வைத்து எழுதச் சொல்லி ஆவணப்படுத்தினார். 1949-ல் மேற்கத்திய மருத்துவத்தில் பயிற்சிபெற்ற சீனரான ஷூ லியான் என்பவரால் நவீன அக்குபஞ்சர் நூல் எழுதப்பட்டது. அதுதான் இன்றைய மருத்துவர்களுக்கு அக்குபஞ்சர் கையேடாக உதவுகிறது.

உடனடி நிவாரணம்

அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் அலுவல் பயணமாக 1971-ல் சீனாவுக்கு வருகை தந்தபோதுதான் அமெரிக்காவுக்கு அக்குபஞ்சர் அறிமுகம் ஆனது.

அவரது பயணம் குறித்துச் செய்தி சேகரிப்பதற்காக நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் ஜேம்ஸ் ரெஸ்டன் உடன் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே குடல்வால் அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. சீனாவுக்கு வந்து இறங்கியதிலிருந்து அவருக்கு வயிற்று வலி இருந்துவந்தது. என்னென்னவோ செய்துபார்த்தார்கள். நிவாரணம் கிடைக்கவில்லை.

சீன ஜனாதிபதி மாவோவின் தனி மருத்துவர் ஒரு மூங்கிலை வேகமாகச் சீவி, அவரது உடலில் ஒரு குத்து குத்தினார். குத்தின இடத்தில் வலி இருந்தாலும், அந்தப் பத்திரிகையாளருக்கு வயிற்றுவலி போய்விட்டது. அமெரிக்கா திரும்பிய பிறகு ஜேம்ஸ் ரெஸ்டன், அக்குபஞ்சர் பற்றி எழுதிய கட்டுரை மேற்குலகில் அக்குபஞ்சர் மறுஅறிமுகம் ஆவதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது.

ஆறாயிரம் ஆண்டு வரலாறு

அக்குபஞ்சர், ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து சீனாவில் நடைமுறையில் இருந்துவருகிறது. நைஜிங் (Neijing) என்பதுதான் சீனப் பாரம்பரிய அக்குபஞ்சர் மருத்துவத்தின் ஆதார நூல். அதன் அர்த்தம் உள்ளோடும் உயிர்சக்தி. அந்த நூலின் வயது 5,000 வருடங்கள். ஹங்டி என்ற மன்னருக்கும், ச்சி போ (Qi Bo) என்ற மந்திரிக்கும் இடையே நடந்த உரையாடல்களின் தொகுப்புதான் இப்புத்தகம்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், கால, தேச, வர்த்தமானங்களைத் தாண்டி இன்னும் நிரூபிக்கப்பட்ட மருத்துவத் தீர்வுகளை விளக்கும் அக்குபஞ்சரின் பிரதான நூல் இது. உடலின் ஒரு இடத்தில் குத்தினால் குறிப்பிட்ட வலி அகன்றுவிடும் என்று அந்நூலில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகள், இன்றும் விளைவைத் தருவதாக இருக்கின்றன.

மரபு மருத்துவ முறைகளைப் பற்றி ஆராய்வதற்காக, உலகச் சுகாதார நிறுவனம் 1967-ல் அல்மா அட்டா (Alma Ata) அறிவிப்பு என்ற ஒன்றை வெளியிட்டது. அப்போது எல்லா நாடுகளுடைய சுகாதார அமைச்சர்களையும் அழைத்துப் பேசினார்கள்.

நடைமுறையில் உள்ள மருத்துவ முறையின் போதாமைகள், தீர்வுகாண முடியாத பிரச்சினைகள் குறித்து அந்தக் கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்டது. அந்தந்த நாட்டில் இருந்த பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆய்வு செய்யக் கோரியது. அதன்படி உலகப் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றாக அக்குபஞ்சர் மருத்துவத்தை உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

பரிசோதனை முறைகள்

அக்குபஞ்சரைப் பொறுத்தவரை நோயைப் பரிசோதிப்பதற்கு 12 உறுப்புகளின் செயல்பாடுகள், இரண்டு கைகளின் நாடி வழியாகப் பார்க்கப்படுகிறது. யின் மெரிடியன் என்ற வகைக்குக் கீழ் வரும் இதயம், கல்லீரல், சிறுநீரகச் செயல்பாடுகளை இடதுகை நாடி வழியாகப் பரிசோதிப்பார்கள்.

இதயத்துக்கு ஜோடியாகச் சிறுகுடல், கல்லீரலுக்கு ஜோடியாகப் பித்தப்பை, சிறுநீரகத்தின் ஜோடியாகச் சிறுநீர்ப்பை என ஆறு உறுப்புகளின் செயல்பாடுகள் கணிக்கப்படுகின்றன.

வலது கையைப் பொறுத்தவரை, நுரையீரல் (பெருங்குடல்), மண்ணீரல் (வயிறு), இதய உறை-சிரை ஆகிய மூன்று உறுப்புகளின் செயல்பாடுகளும் அவற்றின் ஜோடி உறுப்புகளாக முறையே பெருங்குடல், வயிறு மற்றும் இடுப்பு வளையம், நெஞ்சுக்கூட்டுப் பகுதி, அடிவயிறு ஆகியவற்றின் நிலைகள் பரிசோதிக்கப்படுகின்றன. இந்தப் பரிசோதனைகளின் அடிப்படையில்தான் மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்குகின்றனர்.

உடலில் அதிகப்படியான உயிராற்றல் இருந்தால் நோயும் வலியும் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. குறைவான ஆற்றல் இருந்தாலும் நோய், வலி ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு.

உயிராற்றல் பாதை

‘மருந்தில்லா மருத்துவம், மருத்துவர் வேண்டா உலகம்!' என்னும் நோக்கத்துடன் அக்குபஞ்சர், ஹோமியோபதி, சித்த மருத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மருத்துவம் செய்துவருகிறார் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த மருத்துவர் லக்ஷ்மி நரசிம்மன். அக்குபஞ்சரின் அடிப்படை குறித்து அவர் பகிர்ந்துகொண்டது:

"அக்குபஞ்சர் என்பது லத்தீன் மொழியில் அகுஸ் (ஊசி), பஞ்சர் (குத்துதல்) என்ற இரு வார்த்தைகளைச் சேர்த்து உருவான சொல். ஊசியால் குத்துவதன் மூலமாக, உடலில் இருக்கக்கூடிய உயிர் ஆற்றல் பாதைகளில் நேரக்கூடிய அடைப்புகளைச் சரிசெய்வதுதான் அக்குபஞ்சரின் அடிப்படை.

மருத்துவ அறிவியலைப் பொறுத்தவரை உடற்கூறியல், உடலியக்கவியல், நோய்க்குறியியல், குறை களைவது ஆகிய நான்கு அடிப்படைகள் அவசியம். அக்குபஞ்சருக்கும் இத்தகைய நான்கு அடிப்படைகள் உண்டு. அந்த வகையில் இந்தப் பூமியின் தலையாய மருத்துவ முறை அக்குபஞ்சர்தான். தர்க்கவாதம், நடைமுறை இரண்டுக்கும் பொருந்தக்கூடிய மருத்துவம் இது.

சமநிலையும் சமன்குலைவும்

உயிர் ஆற்றலை நேர்மறை, எதிர்மறை ஆற்றல்களாக யின், யான்- ஆகப் பார்க்கிறது அக்குபஞ்சர். இவற்றின் இணைவுதான் இயக்கம். யின் என்பது பெண். பெண்மை, குளிர்ச்சி, கருமை என இது வகுக்கப்பட்டுள்ளது. யான் என்பது ஆண். ஆண்மை, வெப்பம், உறுதி, வெளிச்சம் என வகுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அம்சங்களுக்கு இடையிலான சமன்குலைவு, நோய் என வரையறுக்கப்பட்டுள்ளது.

அக்குபஞ்சரைப் பொறுத்தவரை பிரபஞ்சத்தை ஆட்சி செய்யும் பஞ்சபூதச் சக்திகளின் கட்டமைப்பாகத்தான் நமது உடலும் இருக்கிறது. இந்தப் பஞ்சபூதச் சக்திகள்தான் 12 உயிர் உறுப்புகள் வழியாக உயிராற்றலாக ஓடுகிறது. இந்தப் பஞ்சபூதங்கள் அல்லது 12 உயிர் உறுப்புகளுக்கு இடையே எப்போது சமநிலை குலைகிறதோ, அப்போது நோய் ஏற்படுகிறது.

அக்குபஞ்சரைப் பொறுத்தவரை ஒரு உடல் உறுப்புக்குச் சக்தியைக் கொடுக்கும் உறுப்பு தாய் ஆகிவிடுகிறது. சக்தியைப் பெறும் உறுப்பு வாரிசாகிவிடுகிறது. அதேபோல ஜோடி உறுப்புகளும் உண்டு. ஆதிக்கம் செலுத்தும் உறுப்பு கணவன் உறுப்பாக இருக்கும். மனைவி உறுப்பும் இருக்கும்.

ஊசிகளின் அற்புதம்

அக்குபஞ்சர் மருத்துவத்தைப் பொறுத்தவரை இலங்கையைச் சேர்ந்த ஆண்டன் ஜெயசூர்யா மிகப்பெரிய வல்லுநர். அவர் சொல்லும் விளக்கம் இதுதான் - "மனிதக் குலம் அனைத்துக்குமான தீர்வை அக்குபஞ்சர் கையில் வைத்திருக்கவில்லை. அக்குபஞ்சர் தத்துவார்த்த அடிப்படையிலான அறிவியல். அதை முழுமையாக உணர்ந்து மருத்துவம் செய்யக்கூடியவர்களின் கையில் உள்ள ஊசியால் பல அற்புதங்களைச் செய்துவிடமுடியும்". இதன் மூலம் அக்குபஞ்சரை அவர் வரையறுத்து விடுகிறார்.

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த சீன மருத்துவர்கள் இப்போதும் இங்கே பல் மருத்துவர்களாக அறியப்படுகின்றனர். தமிழகத்தில் எல்லா நகரங்களிலும் சீனப் பல் மருத்துவர்கள் இருக்கின்றனர். அவர்கள் அக்குபஞ்சர் முறையைக் கொண்டே பல் ஈறை மரத்துப்போக வைத்துப் பற்களை எடுத்தனர். ஆனால் அவர்கள் பாரம்பரிய அக்குபஞ்சரில் இருந்து விலக்கப்பட்டு, பல் மருத்துவர்களாகவே அறியப்படுகின்றனர்."

கல்வி

இந்தியாவைப் பொறுத்தவரை அக்குபஞ்சர் முறைப்படுத்தப்படாத மருத்துவமாகவே உள்ளது. இலங்கையில் உள்ள ‘இண்டர்நேஷனல் ஓபன் யுனிவர்சிட்டி ஆஃப் காம்ப்ளிமெண்டரி மெடிசன்’-ஸில் அக்குபஞ்சர் குறித்து அஞ்சல் வழிப் படிப்பு இருக்கிறது. அக்குபஞ்சர் கோட்பாடுகளைப் படித்துவிட்டுக் குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த அனுபவம் இருப்பது ஒரு மருத்துவருக்கு அவசியம். இந்தியாவைப் பொறுத்தவரை, புகழ்பெற்ற ஆங்கில மருத்துவர்கள்கூட அக்குபஞ்சர் முறைகளையும் சேர்த்து மருத்துவம் செய்கிறார்கள்.

தீர்வுகள்

இடியோபதிக் என்று சொல்லக்கூடிய, மருத்துவர்களால் காரணமே அறியமுடியாத நோயாளிகளை அக்குபஞ்சரால் குணப்படுத்த முடியும். உயிராற்றலை மேம்படுத்துவதன் மூலம் நோய்களைக் குணப்படுத்த முடியும். தி பிரிட்டிஷ் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் நடத்திய ஆய்வில் பல்வேறு குறைபாடுகளுக்கு அக்குபஞ்சர் தீர்வளிப்பது தெரிய வந்துள்ளது.

பல் வலி, தாடை வலி, முதுகு வலி, அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் குமட்டலை அக்குபஞ்சர் சீரமைக்கிறது. கருத்தரிப்புக் குறைபாடு, பெண்களுக்கு ஏற்படும் மூட்டு வலிகள் ஆகியவற்றைத் தீர்ப்பதில் அக்குபஞ்சர் வெற்றிகரமாகச் செயல்படுகிறது.

நடத்தைக் குறைபாடுள்ளவர்களுக்குத் தொடர்ந்து அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பதன் மூலம், அவர்களது மனநிலையை மேம்படுத்த முடியும் என்கிறார் லக்ஷ்மி நரசிம்மன்.

ஊசி என்ன செய்கிறது?

உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் பரிசீலனை செய்து சிகிச்சை தருவதுதான் அக்குபஞ்சர். அக்குபஞ்சரில் பயன்படுத்தப்படும் ஊசி ஆத்மாவையும் தொடுகிறது. உடலை யின், யாங் என்று இரண்டாகப் பிரிக்கிறது அக்குபஞ்சர்.

சந்திரன்தான் யின். சூரியன்தான் யாங். அக்குபஞ்சர் ஊசி மூலமாகப் பிரபஞ்சத்தின் அதிர்வலைகளை உடலைச் நோக்கி ஈர்த்து உடலை சமநிலைப்படுத்துவதால் நோய் குணமாகிறது என்பதே இம்மருத்துவத்தின் கோட்பாடு.

உடலில் உள்ள உயிராற்றலை அக்குபஞ்சரில் ‘ச்சி’ (qi) என்று அழைக்கிறார்கள். அந்த உயிராற்றல் கண்ணுக்குத் தெரியாதது. அந்த உயிராற்றலைத் தூண்டிச் சமநிலைபடுத்துவதுதான் அக்குபஞ்சர் மருத்துவம்.

உடலில் மெரிடியன் (meridian) என்று சொல்லப்படும் நடுப்பகுதி வரைதான், உயிர் ஆற்றல் பாதை இருக்கிறது. அதில் ஊசியைச் செலுத்தி ஆற்றல் மண்டலத்தைச் சீர்படுத்துவதுதான் இம்மருத்துவம். உச்சி முதல் உள்ளங்கால் வரை அக்குபஞ்சர் ஊசி செலுத்தப்படுகிறது.

ஊசி பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதச் சக்திகளை ஈர்க்கிறது. நீர், நிலம், காற்று, நெருப்பு, வானம் என உடலையும் பஞ்சபூதங்களாக அக்குபஞ்சர் பார்க்கிறது. அக்குபஞ்சர் மருத்துவம் யோக அறிவியலைப் போலவே உடலை ஏழு சக்கரங்களாகப் பிரிக்கிறது. இந்த ஏழு சக்கரங்களை இணைக்கும் இரு உயிர்சக்தி ஓட்டப்பாதைகள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. இந்த இரு சக்தி ஓட்டப்பாதை வழியாக, நமது உள்ளுறுப்புகளுக்கு ஆற்றல் வழங்கப்படுகிறது.

இப்படிப்பட்ட அக்குபஞ்சரின் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளின் அக்குபஞ்சர் நிலை நம் உள்ளங்கையில் இருக்கும் அமைப்பை தெரிந்து கொள்ளுங்கள்


உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு கீழே உள்ள சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
--------------------------------------------

கொக்க கோலா வின் நச்சுத்தன்மையை பரிசோதிக்கும் சோதனை

நாம் இது வரை குடித்துக்கொண்டிருந்த கொக்க கோல மற்றும் பெப்சி போன்ற குளிர்பானங்களில் கலந்திருக்கும் நச்சுத்தன்மையை பரிசோதிக்கும் சோதனை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்....


உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு கீழே உள்ள சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
--------------------------------------------

நாம் காதிற்க்குள் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்

 
    நாம் சத்தங்களை கேட்கும் போது நம் காதி|ற்க்குள் நடக்கும் செயல்களை நாம் இது வரை பார்த்த இருக்க முடியாது

      இப்போது கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் வியந்து போவீர்கள்...


உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு கீழே உள்ள சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
--------------------------------------------

கண் பார்வை அதிகரிக்க சில எளிய பயிற்சிகள்!!



1 இரு உள்ளங்கைகளைக் கொண்டு இதமாக, மென்மையாக உங்கள் கண்களை தேய்க்கவும். லேசாக சூடு பரவும் வரை இவ்வாறு செய்த பிறகு, கண்களுக்கு ஓய்வளியுங்கள். வெளிச்சம் குறைவான இடங்களில் இவ்வாறு பயிற்சி செய்தல் நல்லது.

2.கண்களை இமைத்தல், கணினி பயன்பாட்டாளர்கள் பெரும்பாலும் கண்களை தொடர்ந்து இமைப்பது இல்லை. கண்களை சீரான முறையில் இமைத்து வந்தாலே நல்ல புத்துணர்ச்சி ஏற்படும்.

3.உற்று நோக்கும் பயிற்சி, கணினியில் வேலை செய்பவர் பலர் இரண்டடி தூர இடைவேளையை மட்டுமே உற்று நோக்கி நான் முழுதும் வேலை செய்வதால், தொலை தூர பார்வை குறைபாடு ஏற்படுகிறது. எனவே, 30 நிமிடத்திற்கு ஒரு முறையாவது, ஏதேனும் தொலைதூர பொருள்களை உற்று நோக்கி பயிற்சி செய்வது அவசியம்.

4.கண்களில் அதிக அழுத்தமோ, எரிச்சலோ உணர்ந்தால், உடனே நன்கு தண்ணீர் ஊற்றி கண்களை கழுவுங்கள். பின் 5 நிமிடம் கண்களுக்கு ஓய்வளியுங்கள். இது, கண்களுக்கு ஏற்ப அழுத்தத்தை குறைக்க உதவும்.

5.லைசன்ஸ் வாங்க உங்கள் வாகனத்தில் பெரிய “8” போட்டதைப் போல, நீங்களே உங்கள் கண் முன்னே பெரிய எட்டு உள்ளதை போன்று பாவித்து, கண்களாலே எட்டு போட்டு பயிற்சி செய்யுங்கள்.

6.ஜூமிங் (zooming) பயிற்சி, உங்கள் விழிகளுக்கு அருகாமையில் இருந்து தூரம் வரை ஏதேனும் நகரும் பொருளை உற்று நோக்கும் பயிற்சி. உதாரணமாக, கைக் கட்டை விரலை, முகத்திற்கு அருகாமையில் இருந்து தூரம் வரை நகர்த்தி உற்று நோக்குதல்.

7.அதிகாலை நடைப்பயிற்சி, அதிகாலை சூரிய ஒளி மிகவும் நல்லது, புத்துணர்ச்சி அளிக்க கூடியது. இது கண்களை அழுத்தமின்றி, இலகுவாக உணர உதவும்.

8.கண்ணாடிகளை சார்ந்து இருக்க வேண்டாம், இது உங்கள் கண் பார்வையை அதிகரிக்க ஒரு போதும் உதவாது, நல்ல உணவும், பயிற்சிகளையும் சீரான முறையில் மேற்கொள்ளுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு கீழே உள்ள சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
--------------------------------------------

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை




சமைத்த உணவை 1½ மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையெனில் அந்த உணவு உடலில் மந்தத் தன்மையை உருவாக்கும். இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு பாதிக்கப்படும்.

 8/9 வயதை அடைந்தவுடன் குழந்தைகளை அதிகாலையில் எழுப்புங்கள். ஏதாவது ஒரு செயல் செய்ய வையுங்கள்.

அசைவ உணவு கொடுப்பதை கூடியமட்டும் தவிருங்கள்.
எப்போதும் புதிதாக தயாரிக்கப்பட்ட உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுங்கள். 

நிறைய காய்கறிகள், பழங்கள், முளை கட்டிய தானியங்களைக் கொடுப்பது அவர்களை இன்னும் அதிக துடிப்பானவர்களாக, உயிர்ப்புள்ளவர்களாக ஆக்கும். 

வெள்ளைப் பூசணியின் சாறெடுத்து தேன் கலந்து தினமும் உண்பது, வளரும் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்து உணவாக இருக்கும். இதன் மூலம் அவர்களது கற்கும் திறனும், வளர்ச்சியும் மேம்படும். 

ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வெள்ளை பூசணி தவிர்த்து விடலாம். குளிர்பானங்கள், செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமூட்டிகள் கொண்ட மசாலா அடங்கிய உணவுகளை கடைகளில் வாங்கி உண்பதை குழந்தைகள் தவிர்க்க வேண்டும். 

நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

பெற்றோர் தம்முடைய கருத்துக்களை அவர்கள் மேல் திணிப்பதை விட்டுவிட்டு, குழந்தை தனது திறனை தானே கண்டறிய ஊக்குவிக்க வேண்டும்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு கீழே உள்ள சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
--------------------------------------------

பல் வலிக்கு இயற்க்கையான தீர்வு


நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை குறைக்க இவைகளை சிறப்பாக பயன்படுத்த முடியும். பல் வலிக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு இயற்கையாக குணப்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை கீழே தெரிந்து கொள்ளலாம்.

பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும்.

கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.

எலுமிச்சை சாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம்.

வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்க முடியும்.

சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்க வாய் கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள்.
பல் வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம்.

அசோக மரப்பட்டையுடன் உப்பு சேர்த்து பொடியாக்கி அதில் பல் துலக்கினால் பல் ஈறுகள் வலுப்படும், பல் நோய்கள் குணமாகும்.

ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் காய வைத்துக் கொள்ளவும். இத்துடன் படிகாரம் சேர்த்து பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் பல் துலக்கி வந்தால் பல் தொடர்பான நோய்கள் வராது.

ஆலமரத்துப் பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் நோய்கள் குணமாகும்.

ஆலமரத்துப் பட்டையை பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி, பல் கூச்சம் உள்ளிட்ட பல் பாதிப்புகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்தால் பல் வலி குணமாகும்.

உப்புடன் கொய்யா இலையைச் சேர்த்து அரைத்து, உலர்த்திப் பொடி செய்து பின்னர் பல் துலக்கலாம். இதன் மூலம் பல் வலி மற்றும் ஈறு வீக்கம் குணமாகும்.

எலியாமணக்கு குச்சியால் தினமும் பல் துலக்கினால் பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

எலுமிச்சம் பழத்தின் தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து பல் தேய்க்க பயன்படுத்தலாம். இதன் மூலம் பல்லின் பளிச் தோற்றத்தை பாதுகாக்கலாம்.

ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம், பல் அரணை, ஈறுகளில் ஏற்படும் புண் ஆகியவை குணமாகும்.

கிராம்பு, கொட்டைப் பாக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல் வலி மறையும்.

கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.

கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து பல் துலக்க பயன்படுத்தினால் பல் வலிகள் தீரும்.

சித்தரத்தை, காவிக்கல், படிகாரம், ஆலம்பட்டை ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து, அதில் பல் துலக்கி வந்தால் பல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும்

நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கரிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு கீழே உள்ள சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
--------------------------------------------

முகப்பரு எதனால் வருகிறது போக்குவது எப்படி


பருவ வயதில் “ஆன்ட்ரோஜன்” என்றஇயக்குநீர் (Androgen Harmone) ஆண், பெண்இருபாலருக்கும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் ஆன்ட்ரோஜன் அளவுக்கு அதிகமாகச்சுரக்கும்போது முகப்பரு உண்டாகிறது.

சருமத்தில் கொழுப்புச் சுரப்பிகள் (Sebaceous Glands) உள்ளது, அவை “சீபம்” (Sebum) என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளைவெளியேற்றுகிறது. இவை மயிர்க்கால்களில் தங்கி சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கப்பயன்படுகின்றன. பருவ வயதில் சுரக்கும் அதீத ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைப்பசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. அப்போது அவை மயிர்க்கால்களில் வழக்கத்தைவிட அதிக அலவில்படிந்து, திரண்டு, ரவை போன்ற முகப்பருக்கலை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில்பாக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொள்ள, பருக்கள் பெரிதாக வீங்கிக்கொள்கின்றன.எப்படி என்பதை இப்போதுபார்ப்போம்:

  முகப்பருவைப் போக்கவும், தடுக்கவும் கீழ்க்காணும் வழிமுறைகள் நிச்சயம் உதவும்:

1. முகத்தை சோப்புப் போட்டு வெதுவெதுப்பான தண்ணீரால் அடிக்கடிகழுவுங்கள்.

2. முகத்தில் பவுடர் பூசுவதையும், அழகு சாதன களிம்புகள்உபயோகப்படுத்துவதையும் தவிருங்கள்.

3. சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு தேவை.

4. கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ்கிரீம், சாக்லெட், பாலாடை போன்றவற்றையும் ஒதுக்குங்கள்.

5. கீரை மற்றும் பச்சை காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள்.

6. தினமும் இரண்டு லிட்டருக்கு குறையாமல் தண்ணீர்குடியுங்கள்.

7. மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

8. பருக்களை கிள்ளுவதோ, அதலுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்றஅழுத்துவதோ கூடாது.

9. பருக்களில் சீழ் வைத்தால் “டெட்ராசைக்ளின்” (Tetracycline) மாத்திரைகளை மருத்துவர்பரிந்துரைக்கும் கால அளவுக்கு தொடர்ந்து சாப்பிடுங்கள்.

10. பருக்களின் மேல் பூசுவதற்கு பலவித களிம்புகள் கிடைக்கின்றன.அவற்றை தேர்வு செய்வதற்கு மருத்துவரின் உதவியை நாடுங்கள்

முகப்பரு நீங்க

* பன்னீர் ரோஜா மொட்டுக்களை எடுத்து, அது முழ்கும் அளவு சூடான தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரைமணி நேரம் ஊறிய பின் துடைத்து எடுக்கவும்.இவ்வாறு செய்தல் பருக்கள் நாளடைவில் மறையும்.

* சந்தனக் கட்டையை பன்னீர் விட்டு இழைத்து முகத்தில் தடவி வந்தால், பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் நாளடைவில் மறையும்.

*தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையினால், துவாரங்களில் உள்ள அழுக்கு நீக்கி பருக்கள் வராமல் தடுக்கலாம்.

*ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழச்சாறை, ஒரு ஸ்பூன் குளிர்ந்த நீரில் கலந்து அதை முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு துடைத்து விடவும். இது சருமத்தில் உள்ள எண்ணெய் நீங்கி பருக்கள் வராமல் பாதுகாக்கும்.பார்லர்களில் இதே சிகிச்சையை ஆரஞ்சு பீல் மாஸ்க் என்ற பெயரில் செய்கின்றனர்.

* வேப்பிலை பொடி, துளசி பொடி, புதினா பொடி ஆகியவை தலா ஒரு டீஸ்பூனும், முல்தானிமெட்டி இரண்டு ஸ்பூன்களும் எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிதமான சுடுநீரில் கலந்து முகப்பருக்களில் தடவவும். இந்த கலவையை கண்களுக்கு அடியில் தடவக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும்.

* இரண்டு ஸ்பூன்கள் ஓமவல்லி இலைச்சாறுடன், ஒரு ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை கலந்து பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் பருக்கள் தொல்லை நீங்கும்.

* சோற்றுக் கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மையுடையது. அவற்றின் நடுவில் இருக்கும் பசையை எடுத்து, அதில் சம அளவு நீரைக் கலந்து முகத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைப்பதை பார்க்கலாம்.

* ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப் பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போடலாம். இது பருக்களின் வடு மறைய உதவுகிறது.
உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு கீழே உள்ள சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
--------------------------------------------

டெங்கு காய்ச்சல் - தற்காப்பும் மருத்துவமும்


டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?

  டெங்கு காய்ச்சல் என்பது திடீரென தோன்றும் ஒரு வைரஸ் நோயாகும். இது டெங்கு வைரஸின் டைப் - 1 டைப் - 2 டைப் - 3 மற்றும் டைப் - 4 ஆகிய 4 வகை வைரஸ்களாலும் ஏற்படுவது.

  வெப்ப மண்டலம் சார்ந்த நாடுகளில் காணப்படும் ஏடிஸ் ஏஜிப்டி  என்ற ஒரு வகை கொசுவால் இது பரவுகிறது. இந்த கொசு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரை கடித்து வைரஸை தன்னுள் எடுத்து மற்றவர்களுக்கு பரப்புகிறது.

பரிசோதனைகள் :

♡ வெள்ளை அணுக்களின் மொத்த அளவை பரிசோதனை செய்தல் அதாவது இரத்தத்தில் சாதாரணமாக இருக்க வேண்டிய லியூகோசைட்ஸ் என்ற வௌளை இரத்த அணுக்களின் அளவு (4000 - 10000 சி.எம்.) எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை பரிசோதனை செய்தல்.

♡ டெங்கு காய்ச்சலின் போது இரத்தத்தில் உள்ள இரத்த வட்டுக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படும்.

சிகிச்சை முறைகள் :

♡ டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி இலை சாறு குடித்தால் இரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கும்.

♡ நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்து காய்ச்சலை குணப்படுத்தும். மலைவேம்பு இலை சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது.

♡ இரத்த வட்டுக்கள் அளவு 4000 - த்திற்கும் குறைவாக இருக்கும்போது புதிய இரத்தமோ அல்லது இரத்தவட்டுக்கள் நிறைந்த ஊனீர் (பிளாஸ்மா) அதாவது பி ஆர் பி ஏற்றப்படும்.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் முறைகள் :

♡ கொசுக்கடிகளிலிருந்து நம்மை பாதுகாப்பதன் மூலம் இதனை தடுக்கலாம். பாதுகாப்பான உடைகள் அணிய வேண்டும்.

♡ வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். மேலும் தண்ணீரை காய்ச்சி குடித்தல் வேண்டும்.

டெங்கு காய்ச்சலின் மூன்று கட்டங்கள் :

காய்ச்சல் கட்டம் :

♡ கடுமையான காய்ச்சல் வரக்கூடிய முதல் கட்டம் 104 105 106 என்று அதிக அளவில் உள்ள காய்ச்சல் ஆகும். உடம்பு வலியும் தலை வலியும் வரும். சிலருக்கு வாந்தியும் இருக்கும். இந்த சிரமங்கள் இரண்டிலிருந்து ஏழு நாட்கள் வரை இருக்கும். வெகு சிலருக்கு சரும தடிப்புகள் உண்டாகும். அவை ஒரு ஏழு நாட்கள் வரை இருந்து விட்டு பின்பு மறையும். சிலருக்கு வாய் மற்றும் மூக்கின் உள்ளே அமைந்திருக்கும் சளிச்சவ்வுகளில் இரத்த பெருக்கு உண்டாகும். இந்த காய்ச்சல் சற்று வித்தியாசமானது. ஒரு நாள் காய்ச்சலே இல்லாதது போல் தோன்றும். மறுநாள் வந்துவிடும்.

நெருக்கடியான கட்டம் :

 இந்த கால கட்டத்தில் இரத்த அணுக்களை ஏந்திச் செல்லும் Pடயளஅய என்ற நிறமற்ற திரவம் இரத்த நாளத்தை விட்டு வெளியேறி செல்கிறது. இந்த நிலை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரை நீடிக்கும். மார்பகம் அடி வயிற்று பகுதிகளில் இந்த நிறமற்ற திரவம் குவிந்து கொள்கிறது. இவ்வாறு இந்த நிறமற்ற திரவம் இரத்த அணுக்களை ஏந்தி செல்லும் வேலையை செய்யாமல் பந்த் செய்வதால் முக்கியமான உடல் உறுப்புகளுக்கு இரத்தம் முழுமையாக விநியோகம் செய்யப்படாமல் உடம்பு திணறி போகும். இதனால் பல உறுப்புகள் செயல்படாமல் போகக்கூடும். மேலும் இரைப்பை குடலில் அதிகமான இரத்த பெருக்கு உண்டாகக்கூடும்.

மீட்புக் கட்டம் :

 இந்த மீட்பு கட்டத்தில் இரத்த நாளத்தை விட்டு நீங்கி சென்ற அந்த நிறமற்ற திரவம் திரும்பவும் தன் இருப்பிடம் வந்து சேரும். இது ஒரு இரண்டு நாட்களுக்கு நீடிக்கும். உடல் நிலையில் சற்று முன்னேற்றம் காணப்படும். அத்தகைய தருணத்தில் ஒரு சிலருக்கு உடம்பு முழுவதும் ஒரு அரிப்பு தோன்றும்.

- இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.


உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு கீழே உள்ள சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
--------------------------------------------

மஞ்சள் காமாலையின் காரணங்களும் மருத்துவமும்


♡ வயதான ரத்த சிவப்பணுக்கள் மண்ணீரலில் அழிக்கப்படும் போது பிலிரூபின் என்ற நிறப்பொருள் உடலில் உற்பத்தி ஆகிறது.

♡ இந்த பிலிரூபின் மலம்இ சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.


♡ கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப்பொருளான பிலிரூபின் உடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது.


♡ மது அருந்துவதாலும் ஹெபடைட்டிஸ் கிருமிகள் கல்லீரலை தாக்குவதாலும் கூட மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.


♡ வைரஸ்  மற்றும் நுண் கிருமிகளால் ஏற்படும் மஞ்சள் காமாலை அசுத்தமான நீரையும் ஈ மொய்த்த தின்பண்டங்களை உட்கொள்வதாலும் பரவுகிறது.



♡ சாக்கடை நீர் கலந்த குடிநீர் மற்றும் அசுத்தமான நீரை குடிப்பவர்களுக்கும் இந்த ஆபத்து ஏற்படும்.



♡ வைரஸ்  மற்றும் ’ வகை கிருமிகள் ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது அதாவது பலமுறை பலருக்கு பயன்படுத்திய ஊசியை உபயோகப்படுத்தும் போது பரவுகிறது.



மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும் முறைகள் :



♡ மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.



♡ எந்த ஓர் உணவுப் பொருளைச் சாப்பிடுவதற்கு முன்பாகவும் சாப்பிட்ட பின்னரும் கண்டிப்பாகச் சுத்தமாகக் கைகளைக் கழுவ வேண்டும்.



♡ சாக்கடை ஓரங்களில் உள்ள கடைகளில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.



♡ காய்கறிகள் பழங்களை சுத்தமாகக் கழுவிய பிறகுதான் வெட்ட வேண்டும்.



♡ கழிவறைக்கு அருகில் சமையல் பொருட்களை வைக்கக் கூடாது சமைக்கவும் கூடாது. கழிவறையை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம்.



♡ கழிவறையைப் பயன்படுத்திய பின் சிறுநீர் கழித்த பின் கைகளை கிருமி நாசினி பயன்படுத்தி நன்றாக கழுவ வேண்டும்.



♡ நகம் வளர்க்கக் கூடாது. நகம் கடிக்கக் கூடாது.



♡ நேரத்திற்க்கு சாப்பிட வேண்டும். குறிப்பாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.



♡ நண்பர்கள் உறவினர்கள் என மற்றவர்களின் ஷேவிங் செட் போன்றவற்றையும் பயன்படுத்தக் கூடாது.



♡ எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகள் சாப்பிடுவது மிக முக்கியம்.
-
 இருப்பினும் மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.


மஞ்சள் காமாலை வந்தபின் காக்கும் முறைகள் :



♡ மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்தவேண்டும்.



♡ சுற்றுப்புறத்தை மிக தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.



♡ சுகாதாரமான கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும் ஈக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.



♡ கல்லீரல் பாதிப்பு நோய் உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத்தை கண்டிப்பாக விட்டுவிட வேண்டும்.



♡ கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்போது கூடுதல் பாதுகாப்பு  நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.



♡ உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது அவசியம்.

உணவு முறைகள் :



தவிர்க்கவேண்டிய உணவுகள் :



♡ காரமான மசாலா உணவு வகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.



♡ மஞ்சள் காமாலை வந்து ஐந்து மாதங்கள் வரை அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது.



♡ முட்டையின் மஞ்சள் கரு அதிக புரதம் உள்ள பருப்பு சோயா வகைகள் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மஞ்சள் காமாலை நோய்க்கு தேவையான பரிசோதனைகள்

மஞ்சள் காமாலை நோய்க்கு தேவையான பரிசோதனைகள் :



♡ ரத்தத்தில் மொத்த பிலிருபின் தனித்த பிலிருபின் இணைந்த பிலிருபின் ஆல்புமின் குளோபுலின் எவ்வளவு உள்ளன என்று கணிக்கும் பரிசோதனை இது.



♡ ஏ.எல்.பி ஏ.எஸ்.டி.  ஏ.எல்.டி. ஜி.ஜி.டி.  பரிசோதனைகளும் செய்யப்படும். ரத்தத்தில் என்சைம்களை அளக்கும் பரிசோதனை இது.



♡ ஹெச்பிஎஸ்.ஏஜி.  பரிசோதனையில் காமாலையின் வைரஸ் வகையை அறிய முடியும்.



♡ கல்லீரல் வீக்கத்தைக் கண்டறிய வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சி.டி. ஸ்கேன் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும்.




♡ இந்தப் பரிசோதனைகளை எந்த நேரத்திலும் செய்துகொள்ளலாம். முன் ஏற்பாடு எதுவும் தேவையில்லை.


உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு கீழே உள்ள சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
--------------------------------------------

வெள்ளை சீனியில் உள்ள தீமைகள்



வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை கீழே உள்ள வீடியோவில் கொடுத்திருக்கிறேன் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

* கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

* பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

* சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

* 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

* பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண் மற்றும் சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

* சுடுகலனில் காஸ்டிக் சோடா மற்றும் வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

* மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

* இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம் அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்ல பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது. ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வெல்லம், பனங்கட்டி மற்றும் நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ மற்றும் சர்க்கரை வியாதியோ வராது.

முக்கியமான தகவல்:

சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்? இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

வெள்ளை சர்க்கரை தயாரிக்கும் முறை
நம் ஆரோக்கியத்திற்க்கும் நம் தலைமுறையின் ஆரோக்கியத்திற்க்கும் வெள்ளை சர்க்கரையை தவிற்ப்போம் நாட்டுச்சர்க்கரை பயன்படுத்துவோம்.
நாட்டுச்சர்க்கரையின் பயன்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு கீழே உள்ள சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
--------------------------------------------

இடுப்பு வலி ஏற்படக் காரணங்கள்:



♡ அதிகமான நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டுஇ இடுப்புவலியால் அவதிப்படுவர். காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே அமர்ந்திருப்பதுதான்.

♡ இருக்கையில் நேராக சரியான நிலையில் உட்காராமல் இருப்பது.

♡ முறையற்ற உடற்பயிற்சி.

♡ நீண்ட நேரம் அமர்ந்து பிரயாணம் செய்யும் போது இடுப்பு வலி ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது.

♡ எலும்புகளில் ஏற்படும் சுண்ணாம்புக் குறைவு.

♡ சரியாக குணப்படுத்தப் படாத வாயுக் கோளாறு.

♡ நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வதால் இடுப்பு வலி வருகிறது.

இடுப்புவலி வராமல் தடுக்கும் முறைகள் :
♡ அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம்.

♡ சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும்.

♡ கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

♡ அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும்இ மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும்.

♡ பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

♡ சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.

♡ தினசரி உற்சாகமாக உடல் உழைப்புடன் இயங்க வேண்டும் அல்லது உடற் பயிற்சி செய்ய வேண்டும்.

♡ நாற்காலியில் அமரும்போது முதுகுப் புறமும்இ இடுப்புப் பகுதியும் சாய்ந்திருக்குமாறு வசதியாக உட்காருங்கள்.

♡ நீண்ட நேரம் ஒரே நிலையில் நின்றபடி வேலை செய்வது முதுகின் வளைவிற்குப் ஆபத்தை ஏற்படுத்தும்.

இடுப்பு வலி எதனால் வருகிறது என்பதின் மருத்துவரின் ஆலோசனையை கேளுங்கள்


இடுப்புவலி வந்தபின் காக்கும் முறைகள் :

♡ அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் இடுப்பு வலி ஏற்படும்.

♡ புகைப் பழக்கத்தை தவிர்த்துவிடுதல் நல்லது.

♡ உடலுக்கு அசௌகரியமான நிலைகளில் அதிக நேரம் நிற்கக் கூடாது.

- இருப்பினும்இ மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.
உணவு முறைகள் :

சேர்க்கவேண்டிய உணவுகள் :

♡ உணவில் முடக்கத்தான் கீரைஇ இஞ்சிஇ புதினாஇ பூண்டு போன்ற வாயு நீக்கும் உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

♡ வாயு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் தவிர்த்து விடுவது நல்லது.

♡ கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும்.

♡ வெள்ளைப் பூண்டு இடுப்புவலியை பெருமளவு குறைத்துவிடும்.
தவிர்க்கவேண்டிய உணவுகள் :

♡ பகல் தூக்கம்இ மனக்கவலைகள்இ மன அழுத்தம் போன்ற நோய்கள் வரக்காரணமான வறுத்த உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

♡ உருளைக் கிழங்குஇ பட்டாணிஇ காராமணிஇ வாழைக்காய்இ அதிக புளிஇ குளிர் பானங்கள் ஆகியவற்றை இடுப்புவலி நோயாளிகள் அறவே தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சிகள்

♡ உட்கார்ந்திருக்கும்போது உங்கள் பாதங்கள் தரையில் பதிந்திருக்கும் படியாகவும்இ முழங்கால்கள் செங்குத்தாக மடிந்திருக்கும்படி உட்கார வேண்டும்.

♡ ஒரு வாரத்திற்கும் மேலாக உங்களுக்கு இடுப்பு வலி தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

♡ படுத்திருந்தபடி உங்கள் ஒரு முழங்காலை மடித்து நெஞ்சு வரை கொண்டு செல்வதாகும். முதலில் ஒரு காலில் செய்யுங்கள். பிறகு மற்றக் காலில் செய்யுங்கள். இறுதியாக இரண்டு கால்களையும் சேர்த்துச் செய்யுங்கள். பத்துத் தடவைகள் செய்யலாம்.

♡ முதுகைப் பிற்புறமாக வளைப்பது மற்றொரு நல்ல பயிற்சியாகும்.

♡ தோள்பட்டையை வலது புறமாகவும் இடதுபுறமாகவும் சாய்க்க வேண்டும்.
உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு இந்த சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
--------------------------------------------

புற்றுநோய் ஏற்படக் காரணங்கள்


♡ உடலுக்குள் மெல்ல மெல்ல உடலின் அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் (செல்கள்) பாதிக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்பதாகும்.

♡ உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது.

♡ புகையிலை உபயோகித்தல்இ உணவுமுறைகள்இ சூரியனின் கதிர்வீச்சுஇ மாசு மற்றும் நச்சுத்தன்மையுடைய வேலை மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலைஇ வாழ்க்கைமுறை ஆகியவை புற்றுநோய் வரக் காரணமாக இருக்கிறது. இத்தகைய மரபணு மாற்றங்கள் பெற்றோர்களிடம் இருந்து பரம்பரையாகவும் வருகிறது.

♡ சில வைரஸ்களும்இ புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. உதாரணமாக எச்.ஐ.விஇ ஹெபடைட்டிஸ் போன்றவை.

♡ பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு வரலாம்.


புற்றுநோய் வராமல் தடுக்கும் முறைகள் :




♡ ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது

♡ புகையிலை பயன்படுத்தக்கூடாது.

♡ கொழுப்பான உணவைக் குறைத்துஇ அதிகளவு காய்கறிகள் பழங்கள் மற்றும் முழுதானிய வகைகளை உட்கொள்ளலாம்.

♡ முறையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையினைக் கைக்கொள்ள வேண்டும்.

♡ காலை 10 மணியிலிருந்து 4 மணிவரை சூரிய ஒளி படாமல் தவிர்க்க வேண்டும்.

♡ 40 வயதினைக் கடந்தவர்கள் மருத்துவரைக் கலந்துஇ உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.


புற்றுநோய் வந்தபின் காக்கும் முறைகள் :


♡ மதுஇ புகை பழக்கத்தை கைவிட வேண்டும்.

♡ இரத்த சோகைக்கு உடனடி சிகிச்சை பெற வேண்டும்.

♡ கூரான பற்களை சரிசெய்துஇ வாயை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
♡ சுகாதாரமான சூழ்நிலையில் வசிக்க வேண்டும்.

♡ உறுப்புகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

♡ உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும்.

♡ பதப்படுத்திய உணவை தவிர்க்க வேண்டும்.



உணவு முறைகள் :


♡ தக்காளி
♡ பூண்டு
♡ பெர்ரி
♡ சிட்ரஸ் பழச்சாறு
♡ ப்ராக்கோலி
♡ மஞ்சள்
♡ முந்திரி



புற்று நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி? :


  அறுவைசிகிச்சைஇ கதிர்வீச்சு சிகிச்சைமுறை (ரேடியேஷன் தெரப்பி)இ வேதி மருத்துவம் (கீமோதெரப்பி)இ ஹார்மோன் மருத்துவம் மற்றும் உயிரியல் மருத்துவம் போன்றவை புற்றுநோய் சிகிச்சைகளில் அடங்கும்.

புற்றுநோயின் வகைகள் :


♡ நுரையீரல் புற்றுநோய்

♡ கர்ப்பப்பை வாய் புற்றுநோய்

♡ மார்பக புற்றுநோய்

புற்றுநோய்க்கு இருக்கும் சிகிச்சைகள் :


♡ மூன்றுவிதமான சிகிச்சைகள் உள்ளன.

♡ அறுவை சிகிச்சை

♡ கீமோ தெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்)

♡ ரேடியேஷன் (எக்ஸ்-ரே ட்ரீட்மென்ட்).


உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு இந்த சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
--------------------------------------------

அல்சர் நோயின் காரணங்களும் மருத்துவமும்



அல்சர் நோய் ஏற்படக் காரணங்கள் :

அல்சரின் வகைகள்:

  இரைப்பையில் புண் ஏற்பட்டால் கேஸ்ட்ரிக் அல்சர் என்றும்இ முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் டியோடினல் அல்சர் என்றும் அழைக்கப்படும்.


அல்சர் ஏற்படுவது எதனால்?
♡ பொதுவாக நம் வயிற்றில் பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம்.

♡ நேரந்தவறி சாப்பிடுவதாலும்இ அதிகம் சூடாகச் சாப்பிடுவதாலும்இ பட்டினி கிடப்பதாலும் இரைப்பையில் புண்கள் வரும்.

♡ புகைப்பிடித்தல்இ மது அருந்துதல்இ மென் குளிர்பானம்இ பானங்களை அதிகமாகக் குடிப்பது.

♡ மோசமான சுற்று சூழல்இ கலப்படம் செய்யப்பட்ட உணவுஇ அசுத்தமானக் குடிநீர்இ ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியா ஆகியவற்றால் குடல் புண் ஏற்படுகிறது.

♡ அதிகமான காரம் நிறைந்த உணவுப்பொருட்கள் உண்பதுஇ புளிப்பு மிகுந்தஇ மசாலா கலந்த உணவுஇ எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிடுவதனால் ஏற்படுகிறது.

♡ கவலை மன அழுத்தம் காரணமாகவும் வயிற்றில் அதிக அமிலம் சுரந்து புண் ஏற்படலாம்.

♡ மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரைகள் சாப்பிடுவதாலும் ஏற்படும்.

♡ தினமும் காலை உணவைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கு இரைப்பைப் புண் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அல்சர் நோய் வராமல் தடுக்கும் முறைகள்


♡ காலை உணவை தவிர்க்க கூடாது.

♡ நேரம்தவராமல் உணவு உண்ண வேண்டும்.

♡ பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும்.

♡ காய்கறிகளை ஒதுக்கக் கூடாது.

♡ மசாலா மிகுந்தஇ காரம் நிறைந்தஇ எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோஇ அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும்.

♡ விரைவு உணவுகள்இ பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை சேர்க்கக் கூடாது.

♡ சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டியது முக்கியம்.

♡ புகை பிடிக்கக் கூடாதுஇ மது அருந்தக் கூடாது.

அல்சர் நோய் வந்தபின் காக்கும் முறைகள்
♡ ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்துஇ இடைவெளி விட்டு உணவு உட்கொள்ள வேண்டும்.

♡ உணவில் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

♡ முதலில் நேரத்துக்கு உணவைச் சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

♡ வேகவைத்த பாரம்பரிய உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும்.

♡ அதிக இனிப்புப் பண்டங்களையும்இ புளித்த உணவுகளையும் சேர்க்கக் கூடாது.

♡ மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலிநிவாரணி மாத்திரைகள்இ உடல்வலி மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமலும் அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது.

♡ புண் குணமாகஇ எல்லா விதக் கவலைகளில் இருந்தும் விடுபட வேண்டும்.

♡ வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.

♡ மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

♡ பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

- இருப்பினும்இ மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.

உணவு முறைகள் :
♡ இரண்டு மூன்று வாழைப்பழங்களைப் பாலுடன் சாப்பிட்டால் நல்லது. பச்சை வாழைப்பழம் மிகவும் சிறந்தது.

♡ நெல்லிக்காய் சாறுடன் சர்க்கரை சேர்த்து குடிக்க குணமாகும்.

♡ வில்வ பழங்கள் சாப்பிட வயிற்றுப்புண் குணமாகும்.

♡ பாதாம் பால் அல்சருக்கு நல்லது.

♡ குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும்.

♡ உண்ணும் போது கோபம்இ தாபம்இ வருத்தங்களை தவிர்க்க வேண்டும்.

♡ மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக குடிக்கலாம்.

♡ அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.

♡ அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சாப்பிட அல்சருக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

♡ உலர்ந்த திராட்சைப் பழங்களை சேர்க்க வேண்டும்.

அல்சருக்கு நவீன சிகிச்சைகள் :

♡ நெஞ்செரிச்சல்இ புளித்த ஏப்பம்இ மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

♡ வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். இதை மாத்திரைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

♡ அல்சரை குணப்படுத்த தற்போது புதுவித மருந்துஇ மாத்திரைகள் உள்ளன. அவற்றை வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது. மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட் கொள்வது ஆபத்தானது.

♡ நவீன சிகிச்சை மூலம் அல்சர் நோயாளிகள் குணமடைந் துள்ளனர். அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.

♡ குடல் புண் உள்ளவர்களுள் எண்ணெயில் பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள் ஆகாது.

♡ குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்இ மதுஇ குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும். 

 நாம் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய நம் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் என்ற அமிலம் சுரக்கும். இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலத்தை சிதைத்து புண்களை உண்டாக்கும். இந்த அமிலத்தால் ஏற்படுவதுதான் அல்சர் என்ற குடல் புண் ஆகும்.
உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு இந்த சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
--------------------------------------------

வலிப்பு நோயின் காரணங்களும் முதலுதவியும்


வலிப்பு நோய் ஏற்படக் காரணங்கள் :

♡ மூளையைத் தாக்கும் ஒரு நோய்தான் வலிப்பு நோய். அதாவது மூளையில் ஏதாவது ஒரு காரணத்தினால் உண்டாகிற அதீத அழுத்தத்தால் வேகமாக மின்சாரம் போல் உற்பத்தியாகி நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டுஇ கைஇ கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதுதான் வலிப்பு ஆகும்.

♡ பரம்பரைஇ தலையில் அடிபடுதல்இ பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடுஇ மூளையில் கட்டிஇ ரத்தக்கசிவுஇ ரத்தம் உறைதல்இ கிருமித் தொற்றுஇ மூளைக் காய்ச்சல்இ மூளை உறை அழற்சி காய்ச்சல்இ டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள்.

♡ சர்க்கரை நோய்இ விபத்து போன்ற காரணங்களால் வலிப்பு நோய் உண்டாகும்.

♡ மைய நரம்பு மண்டலத்திற்கு இழைக்கப்படும் சேதங்களால் ஏற்படும்.

♡ பிறப்பின்போது தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள் அல்லது சிராய்ப்புகளால் ஏற்படுகிறது.

♡ சிலருக்குப் பிறப்பின்போதே இருக்கும் நரம்புமண்டலக் குறைப்பாடு.
விபத்தினால் தலையில் ஏற்படும் காயங்கள்.

♡ மூளையில் ஏற்படும் கட்டிகள்.

♡ ஆல்கஹால்இ போதை மருந்து உட்கொள்வதால் ஏற்படும் நரம்பு மண்டலம் பாதித்தல் மூளைக் காய்ச்சலால் வலிப்பு வர வாய்ப்புள்ளது.

வலிப்பு நோய் வராமல் தடுக்கும் முறைகள்

♡ தினமும்இ ஏழு மணிநேரம் முதல் எட்டு மணி நேரம்இ நன்றாக தூங்க வேண்டும்.

♡ அதிக உணர்ச்சி வசப்படக் கூடாது.

♡ தொடர்ச்சியாகஇ அருகில் அமர்ந்துஇ டிவி பார்க்கக் கூடாது.

♡ வேளை தவறாமல் உணவு சாப்பிட வேண்டும். பசியோடு இருப்பது கூடாது. புகைத்தல்இ மது அருந்தக் கூடாது.

♡ அதிக நேரம் போன் பேச கூடாது.

வலிப்பு நோய் வந்தபின் காக்கும் முறைகள் :

♡ இந்த நோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு முன் மருத்துவர் ஆலோசனைப்படி மருத்தினை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். வலிப்பு நோய் தாய் மற்றும் சேய் இருவரையும் பாதிக்கும்.

♡ ஆனால் முறையான வலிப்பு நோய் மாத்திரையும் சத்து மாத்திரையும் சாப்பிடும் போது சுகப்பிரசவம் காணலாம். வலிப்பு இல்லாமல் குறைந்தது 6 மாதங்கள் ஆன பிறகு வாகனங்கள் ஓட்டலாம்.

♡ வலிப்பு நோய் உள்ளவர்கள் தவறாமல் மருந்து சாப்பிட்டால் வலிப்பு இல்லாமல் இருக்கலாம்.

♡ பள்ளிஇ கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லலாம். விளையாடலாம் உடற்பயிற்சி தியானம் மற்றும் பயணம் செய்யலாம்.

♡ திருமணம் செய்து கொள்ளலாம்இ சாதாரணமாக குழந்தைகளைப் பெறலாம். குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாம்.

♡ நல்ல உணவுஇ உடற்பயிற்சிஇ தியானம் மற்றும் சிந்தனை நல்வழிப்படுத்தும்.

♡ மற்றவர்களைப் போல் நன்கு வாழலாம். ஒவ்வொரு முறை வலிப்பு வரும் போதும் மூளையில் உள்ள நரம்பு செல்கள் பாதிப்பு அடைகின்றன. இது நாளடைவில் மூளை வளர்ச்சியை பாதிக்கும்இ எனவே முறையான மருந்துகள் சாப்பிட்டு வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

♡ சர்க்கரை நோய்இ ரத்த அழுத்தம் போன்ற நோய்களைப் போலஇ வலிப்பும் ஒரு நோய் தான். மூளை நரம்புகளின் மாறுபட்ட இயக்கத்தால் வருவது. இதற்கு மருத்துவ சிகிச்சை உண்டு. நோயாளிகள் சீராக மருந்து சாப்பிட்டுஇ தக்க வாழ்க்கை முறையைக் கடைபிடித்து வலிப்பு வராமல் தடுத்து அச்சமின்றி வாழலாம்.

- இருப்பினும்இ மருத்துவரை உடனடியாக அணுகவும். அவரின் பரிந்துரைப்படி மருத்துவ முறையை பின்பற்றுதல் நலம்.

வலிப்பு வரும்போது செய்வதும் செய்யக்கூடாததும்

வலிப்பு வரும்போது செய்யவேண்டியது :

♡ பதட்டப்படாமல் நோயாளியை அமைதியாக கையாள வேண்டும்.

♡ நோயாளியை ஒரு பக்கமாகஇ படுக்க வையுங்கள். இதனால் வாயில் அதிகமாக தோன்றும் உமிழ்நீர்இ நுரை போன்றவை வெளியேறுவதுஇ சுலபமாகும். இதனால்இ சுவாசத்திற்கு எந்த பாதிப்பும் வராது.

♡ நோயாளியின் அருகில் உள்ள பொருட்களைஇ அகற்ற வேண்டும். இதுஇ நோயாளி அப்பொருட்களின் மேல் முட்டி அடிபடுவதைத் தவிர்க்கும்.

♡ சிறு தலையணைஇ துணி மடிப்புகளைஇ தலைக்கடியில் வைக்கவும்.

♡ அடிபட்டிருந்தாலோஇ வலிப்பு ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீட்டித்தாலோஇ நிற்காமல் திரும்பத் திரும்ப வந்தாலோஇ ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.

வலிப்பு வரும்போது செய்யக்கூடாதது :

♡ நோயாளியைச் சுற்றி கூட்டமாக நிற்கக் கூடாது.

♡ காற்றோட்டமான சூழல் மிக அவசியம்.

♡ வாயில்இ பற்களுக்கிடையில் எப்பொருளையும் வைக்கக்கூடாது.

♡ கையில் சாவி கூரான பொருட்கள் தருவதைத் தவிர்க்க வேண்டும்.

♡ முழு சுய நினைவு வரும் வரைஇ குடிக்கவோஇ சாப்பிடவோ எதுவும் தரக்கூடாது.

வலிப்பு நோயின் வகைகள்

 மேலோட்டமாக இவற்றை இருவகைப் படுத்தலாம். முதலாவது பகுதி (Pயசவயைட) வலிப்புஇ இரண்டாவது பொது(புநநெசயட) வலிப்பு.

பொதுவலிப்பு :

பகுதி வலிப்பில் மூளையின் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்படும். அப்பகுதியினால் இயக்கப்படும் உறுப்புகள் வலிப்புக்கு உள்ளாகும். கைஇ கால்இ வாய் இவற்றைக் கட்டுப் படுத்தும் மூளையின் பகுதியில் வலிப்பு ஏற்பட்டால் அந்த உறுப்புகள் மட்டும் பாதிக்கப்படும்.

பகுதி வலிப்பு:

♡ பொதுவலிப்பு மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் பாதிக்கப்படுவதால் உண்டாவதாகும். இதிலும் இருவகைகள் உள்ளன. பெடிட்மால்இ கிராண்ட்மால் என இவ்விரு வகைகளும் அழைக்கப்படுகின்றன.

♡ பெடிட்மால் மிகச் சிறிய அளவில் தோன்றி மறையும் ஒரு வலிப்பாகும். சில சமயம் இது கண்டுகொள்ளப்படாமலேயே வந்து போகலாம். இது ஒரு நொடியிலிருந்து பத்து முதல் இருபது நொடிகள் வரை நீடிக்கலாம்.

♡ கிராண்ட்மால் தாக்கியவர் முதலில் கண் முன் ஒரு பிரகாசமான காட்சி தோன்றுவது போல உணர்வார். கை கால்கள் உதறிக் கொள்ளும். பின்இ சுய நினைவின்றி மயங்கி விழுவார். மலம்இ சிறுநீர் போன்றவை அவரது கட்டுப்பாட்டில் இல்லாமல் பிரிய நேரலாம்.
உங்கள் நண்பர்களுக்கும் பகிரிங்கள்....

மேலும் எங்களுடய புதிய உடல் நலக்குறிப்புகள் மற்றும் பதிவுகளின் நினைவூட்டல்களுக்கு இந்த சிவப்பு பொத்தானை அமர்த்தவும்.
----------------------------------------------------------------------------------------------------------------------